வியாழக்கிழமை காலையில்
இப்படித்தான் வியாழக்கிழமை காலையில் அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்ட ஒரு டிவிட்டுக்கு ஏகப்பட்ட பதில்கள், விளக்கங்கள், கவலைகள் வந்து குவிந்து விட்டன.
இரண்டே டிவிட்டுகள்தான்
இரண்டு டிவிட்டுகள்தான் கோஹ்லி போட்டிருந்தார். அதுதான் பரபரப்பைக் கிளப்பி விட்டு விட்டது.
|
நான் என்ன பண்ணிட்டேன்
நான் என்ன பண்ணிட்டேன் என்பது முதல் டிவிட். உடனே பலரும் என்னாச்சு கோஹ்லி, என்ன பண்ணிட்டீங்க என்று கேட்டுத் துளைத்தெடுக்க ஆரம்பித்து விட்டனர்.
|
ஏதோ தப்பு பண்ணிட்டேன்
அடுத்து ஏதோ தப்பாக செய்து விட்டேன் என்று நினைக்கிறேன் என்று இன்னொரு டிவிட்டைப் போட்டார் கோஹ்லி. இதுவும் காட்டுத் தீ போல கருத்துக்களைக் கவர்ந்து விட்டது.
|
என்னாச்சு
ஏன் என்னாச்சு, என்ன தப்பு பண்ணீங்க, உண்மையிலேயே நீங்கதான் டிவிட் பண்றீங்களா என்று கேட்டு வரிசை கட்டி வந்து விட்டனர் ரசிகர்கள்.
|
ஆமா தப்புதான் பண்ணிட்டீங்க
ஒருவர், I think I may have done something wrogn today (sic)" என்று கோஹ்லி போட்டிருந்த டிவிட்டைக் குறிப்பிட்டு, ஆமாம், ராங் என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங்கை தப்பாகத்தான் போட்டு விட்டீர்கள் என்று நக்கலடித்துள்ளார்.
ஹேக் பண்ணிட்டாங்களோ
இன்னொருவரோ ஒரு வேளை கோஹ்லியின் பக்கத்தை யாரேனும் ஹேக் பண்ணியிருப்பாங்களோ என்று கவலை தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியா பறக்கப் போகும் நேரத்தில்
இந்திய கிரிக்கெட் அணி நாளை இரவு அல்லது சனிக்கிழமை காலை ஆஸ்திரேலியா கிளம்பவுள்ளது. இந்த நேரம் பார்தது இப்படி டிவிட்டைப் போட்டு குட்டையைக் குழப்பியிருக்கிறார் கோஹ்லி.
ஒழுங்கா விளையாடப் பாருங்க
இப்படித்தான் இங்கிலாந்து தொடருக்கு முன்பு பயங்கரமாக பேசி வந்தார் கோஹ்லி. ஆனால் அங்கு போய் முட்டை முட்டையாக வாங்கித் தின்றார். இப்போதும் ஆஸ்திரேலியா கிளம்பும் முன்பாகவே நான் தப்பு செய்திட்டேனே என்று அபசகுணமாக ஆரம்பித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் போய் என்ன வாங்கப் போகிறாரோ....!