|
ஆரம்பிச்சிட்டாங்க
கொஞ்ச நாட்கள் ஓய்ந்திருந்த இந்த குழாயடி சண்டையை, உலக கோப்பை கபடி புண்ணியத்தால் பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவிட்டார் சேவாக். கபடி உலக கோப்பையை இந்தியா 8வது முறையாக வென்றதும், சேவாக் வெளியிட்ட ஒரு டிவிட், மொத்த இங்கிலாந்து ரசிகர்களின் வயிற்றையும் கலங்கடித்தது.
அந்த டிவிட் இதுதான்: "கபடியை கண்டுபிடித்த இந்தியா, 8வது முறை உலக சாம்பியனாகியுள்ளது. கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடோ இன்னும் டைப்பிங் மிஸ்டேக்கை சரி செய்வதில்தான் தேறியுள்ளது" என கூறியிருந்தார் சேவாக்.
|
மோர்கன் திமிர பாருங்க
வெற்றி களிப்பில் இருந்த இந்திய ரசிகர்கள், இந்த டிவிட்டை படு ஸ்பீடாக ரீடிவிட் செய்ய தொடங்கினர். இதுவரை சேவாக்கின் இந்த டிவிட் 29 ஆயிரம் முறை ஷேர் செய்யப்பட்டுள்ளது. சிலர் மோர்கனுக்கு இந்த டிவிட்டை சிசி போட்டு கடுப்பேற்றினர்.
சும்மா இருப்பாரா மோர்கன். கபடி ஒரு விளையாட்டே கிடையாது.. என்று ஒரே போடாக போட்டுள்ளார். "வளந்த பையன்கள் சத்தமிட்டுக்கொண்டே அங்குமிங்கும் ஓடுவதும், ஒருவருக்கொருவர் அடிப்பதும்தான் கபடி" என கபடிக்கு விளக்க உரை எழுதியுள்ளார் மோர்கன். ஆனால் அவரது நாடான இங்கிலாந்து அணி எதற்காக கபடி உலக கோப்பையில் பங்கேற்றது என்பதையும் அவர் விளக்கியிருந்தால், கபடி விளையாட்டா இல்லையா என்பதை உலகம் அறிந்திருக்கும்.
|
நெட்டிசன்கள் வறுவல்
இதனிடையே சேவாக்கை புகழ்ந்தும், மோர்கனை வாரியும், டிவிட்டரில் பல மீம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. சில கேலிகளை இதில் பாருங்கள்:
பேசுவியா.. பேசுவியா.. என கேட்டு மோர்கனை, சேவாக் அடித்து நொறுக்குவது போல இந்த டிவிட் இருந்ததாக கூறுகிறது இந்த நெட்டிசனின் மீம்.
|
கபடியா இது
இங்கிலாந்து வீரர்கள் கபடி என்றால் என்னவென்றே தெரியாமல் மொக்கையாக ஆடியதை இந்த வீடியோ மீம் இப்படி கேலி செய்கிறது
|
அந்தோ பரிதாபம்
கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்தின், தற்போதைய கிரிக்கெட் அணியின் நிலையை கேலி செய்கிறது இந்த மீம்