லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மார்டினா ஹிங்கிஸ் (சுவிட்சர்லாந்து) ஜோடி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறியது.
தரவரிசையில் 7ஆவது இடத்தில் உள்ள பயஸ் - ஹிங்கிஸ் ஜோடி பிரான்ஸின் எட்வர்டு ரோஜர் வாஸ்லின் - அலிஸி கார்னெட் ஜோடியை எதிர்கொண்டது. ஒரு மணி நேரம் ஒன்பது நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் பயஸ் ஜோடி எளிதாக வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - மரியா ஜோஸ் (ஸ்பெயின்) ஜோடி, தரவரிசையில் 6-ஆவது இடத்திலுள்ள ருமேனியாவின் ஹோரியா டெக்கா - கடாரினா ரெபோட்னிக் (ஸ்லோவேனியா) ஜோடியிடம் 2-6 மற்றும் 4--6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது.