இலங்கையில் 88 வயது பாட்டியை பலாத்காரம் செய்த வாலிபர் கைது!
கொழும்பு: இலங்கையில் 88 வயது மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான சம்பவத்தில் வாலிபர் ஒருவரை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.
கண்டி நகரில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆறாம் தேதி 88 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் புகுந்த வாலிபர் ஒருவர், 88 வயது நிறைந்த மூதாட்டி என்று கூட பார்க்காமல் அவரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் அந்த வாலிபர் இச்சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவாகி விட்டாராம்.
உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டி, கண்டியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் கடந்த 8ம் தேதி அந்த மூதாட்டி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுவந்த ரங்காலா பகுதி போலீசார், குற்றவாளியை நேற்று கைது செய்தனர்.