For Quick Alerts
For Daily Alerts
Just In
இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே... மோடி, சோனியாவுடன் சந்திப்பு
கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இம்மாத இறுதியில் இந்தியா வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் நோனியா காந்தியை அவர் சந்தித்து பேச உள்ளார்.
இலங்கையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி 93 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறார். அப்போது, அவர் டெல்லியில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
பிரதமராக பதவியேற்றுக் கொண்ட பின்பு ரணில் விக்கிரமசிங்கே மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
India and Sri Lanka are working to fix the dates for Prime Minister Ranil Wickremesinghe to make New Delhi his first foreign port of call this month itself.
Story first published: Wednesday, September 2, 2015, 20:18 [IST]