ராஜபக்சேவுக்கு ஆதரவாக இலங்கையில் நடிகர் சல்மான்கான் தேர்தல் பிரச்சாரம்
கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஜனவரி 8ம்தேதி நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் மகிந்தா ராஜபக்சே மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ளார். அவரை எதிர்க்க வியூகம் வகுத்த எதிர்க்கட்சிகள் பொது வேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா என்பவரை களமிறக்கியுள்ளன.
எப்படியும் இந்த தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் எதிர்காலத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் ராஜபக்சே வாக்கு சேகரித்துவருகிறார். தமிழர் பெரும்பான்மையாக வாழும் இலங்கையின் வடக்கு மாகாண பகுதிகளில் ராஜபக்சே சிறப்பு கவனம் கொடுத்து தேர்தல் பிரச்சாரம் நடத்திவருகிறார்.
Bollywood push for President Rajapaksa, Salman Khan in Borella today with @PresRajapaksa #PresPollSL @yogital pic.twitter.com/5pGLAa2NgT
— Azzam Ameen (@AzzamAmeen) December 29, 2014
யூடியூப், டிவிட்டர், பேஸ்புக் என சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் ராஜபக்சே தீவிர பிரச்சாரம் நடத்துகிறார். சமூக வலைத்தள பிரச்சாரத்திற்கு வட இந்தியாவை சேர்ந்த ஒருவர் உதவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கான் இன்று கொழும்பு சென்றடைந்தார்.
பொரளை பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் சல்மான்கானும் பங்கேற்றார். அதேபோல, பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசும், ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ராஜபக்சே மகன் நமலுக்கும், சல்மான் கானுக்கும் நடுவே நட்பு இருந்து வருகிறது. ஜாக்குலின் இலங்கையில் பிறந்த வளர்ந்து பாலிவுட் நடிகையானவர். எனவே அந்த அடிப்படையில் இவ்விருவரும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.