For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக மீனவர்கள் 12 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைப்பு.. ராமேஸ்வர மீனவ குடும்பங்கள் அதிர்ச்சி

தமிழக மீனவர்கள் 12 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் ராமேஸ்வர மீனவக் குடும்பங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: நெடுந்தீவு அருகே 3 படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாண சிறையில் அடைத்துள்ளனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேர் 3 படகுகளில் இன்று நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்தப் பக்கம் வந்த இலங்கை கடற்படையினர் படகுகளைப் பறிமுதல் செய்து 12 பேரையும் கைது செய்தனர்.

12 Tamil fishermen sent to Jaffna prison by Sri Lankan Navy

அவர்கள் அனைவரும் ஊர்காவல்த்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்கள் 12 பேரையும் ஆகஸ்ட் 23ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன், 49 மீனவர்கள் ஒரே நாளில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Twelve Tamil fishermen have been sent to Jaffna prison by Sri Lankan Navy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X