பற்றி எரிகிறது தமிழகம்.. ஜல்லிக்கட்டு போராட்டம் எதிரொலி.. இன்றும் 16 ரயில்கள் ரத்து
ஜல்லிக்கட்டு போராட்டம் நடப்பதை போலீசார் கலைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டாலும், சாலை மறியல், ரயில் மறியல் என போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இன்றும் 16 ரயில்கள் ரத்து செய்து தெற்
சென்னை: ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்ந்து நடைபெறுவதால், இன்றும் 16 ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் எழுச்சியோடு நடைபெற்று வந்தது. இதனை இன்று காலை முதல் போலீசார் கலைத்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து மாணவர்களை எப்படி அடிப்பீர்கள் என்று கேட்டு ஆங்காங்கே போராட்டம், சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருச்சி - ராமேஸ்வரம், விருதுநகர் - காரைக்குடி, காரைக்குடி - திருச்சி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், திண்டுக்கல் - திருச்சி, திண்டுக்கல் - மதுரை பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதே போன்று மதுரை - செங்கோட்டை, காரைக்கால் - பெங்களூரு, திருச்சி - மானாமதுரை பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.