சைலேந்திரபாபு, ஜாபர் சேட், ஜாங்கிட் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தமிழக அரசு அதிரடி உத்தரவு
தமிழகத்தில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை: சைலேந்திரபாபு, ஜாபர் சேட், ஜாங்கிட் உள்பட 17 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
காந்திராஜன் - மாநில மனித உரிமை ஆணைய இயக்குநராக நியமனம்
ஜாங்கிட் - பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்
எம்.சி.சாரங்கன் - சென்னை பெருநகர சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக நியமனம்
ஜெயந்த் முரளி - குற்றப்பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாக நியமனம்
கந்தசாமி - நிர்வாகத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்
விஜய்குமார் - காவல் வீட்டு வசதி கூடுதல் டிஜிபியாக நியமனம்
சங்கர் ஜெய்வால் - பால் கூட்டுறவு கூடுதல் கண்காணிப்பாளர்
ஜாபர் சேட் - காவலர் அகடாமி கூடுதல் டிஜிபியாக நியமனம்
ராஜேஷ் தாஸ் - போக்குவரத்து கழக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்
கே.சி.மாகாளி - சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய கூடுதல் டிஜிபியாக நியமனம்
ஷகில் அக்தர் - ஆயுதப்படை கூடுதல் டிஜிபியாக நியமனம்
பிரதீப் வி.பிலிப் - காவலர் நல கூடுதல் டிஜிபியாக நியமனம்
சைலேந்திர பாபு - சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமனம்
தமிழ்ச்செல்வன் - தமிழக கடலோர காவல் படை கூடுதல் டிஜிபியாக நியமனம்
அபாஷ்குமார் - காவல் தொழில் நுட்ப பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமனம்
அம்ரேஷ் புஜாரி - மாநில போக்குவரத்து திட்டக்குழு கூடுதல் டிஜிபியாக நியமனம்
சங்கர் அமலாக்கப்பிரிவு ஐ.ஐியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.