For Quick Alerts
For Daily Alerts
Just In
வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறி 2 பேர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் 2 பேர் பலியானார்கள். 3 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள கொடகனாறு இல்லம் அருகே வீட்டிற்கு வெளியே சிலர் தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது குட்செட்டில் இருந்து குடோனுக்கு சரக்கு ஏற்றும் லாரி ஒன்றை ரிவர்ஸில் எடுத்துள்ளனர். அப்போது வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டிருந்த பழனியம்மா, ஆரோக்கியசாமி உட்பட 5 பேர் மீது லாரி ஏறியது.
இதில் பழனியம்மா, ஆரோக்கியசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். லாரியை ஏற்றிய டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
Comments
English summary
2 persons were crushed to death when a lorry rammed on them in Dindigul.
Story first published: Sunday, March 22, 2015, 10:05 [IST]