For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 நாட்களில் 21 ரயில்கள் ரத்து - இடார்சி தீவிபத்து எதிரொலியால் தெற்கு ரயில்வே அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய பிரதேச மாநிலம் இடார்சி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறை தீ விபத்தினைத் தொடர்ந்து 8 நாட்களில் தமிழகத்தில் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்த தெற்கு ரயில்வே அறிவிப்பில், "இடார்சி ரயில் நிலையக் கட்டுப்பாட்டு அறையில் ஏற்பட்ட தீவிபத்தினால் நாளை மதுரை - டேராடூன்/சண்டிகர் வாரம் இருமுறை ரயில் ரத்தாகின்றது.

21 trains cancelled in 8 days

மேலும், வருகின்ற ஜூலை 7ம் தேதியன்று 3 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. 7ம் தேதியன்று சென்னை எக்மோர் - பீகார் கயா வாராந்திர ரயில், திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்தி சாகர் வாரம் மும்முறை ரயில், மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சப்ராவில் இருந்து புறப்படும் கங்கா காவேரி வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ் ரயில், மன்னார்க்குடியில் இருந்து புறப்படும் மன்னார் குடி-பகத் கி கோதி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கடந்த 8 நாட்களில் தமிழகத்திலிருந்து செல்லும் 21 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் வட மாநிலங்களுக்குச் செல்லும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
totally 21 trains cancelled by Southern railway due to Itarsy railways station fire accident.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X