ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் விஷம் குடித்து தற்கொலை.. ஒருவர் உயிர் ஊசல்.. வேலூர் அருகே சோகம்
வேலூர்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையை அடுத்த புளியங்கண்ணு பகுதியில் வீரராகவன் அவரது மனைவி ஈஸ்வரி மற்றும் மகன்கள் தினேஷ், விக்னேஷ் ஆகியோர் வசித்து வந்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் அனைவரும் திடீரென நேற்று விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்தனர். மனைவி ஈஸ்வரி உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடன் தொல்லை காரணமாகவே அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக அப்பகுதியில் கூறப்படுகிறது.