For Daily Alerts
Just In
தமிழக மீனவர்கள் 6 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாக கூறி தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களை இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துசென்று மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு மீனவர்களிடம் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அடிக்கடி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருவது தொடர் கதையாக உள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
Comments
English summary
the 6 Fishermen belongs to tamilnadu were arrested by Sri Lankan Coastal security Force.
Story first published: Tuesday, May 23, 2017, 22:21 [IST]