For Daily Alerts
Just In
கார் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி; திருவண்ணாமலை அருகே பயங்கரம்
திருவண்ணாமலை புறவழிச் சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் என்ற இடத்தில் காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
படு காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 7 பேரும் விழுப்புரம் மாவட்டம் இளவரசன் கோட்டையைச் சேர்ந்தவர்கள். காரில் திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்குச் சென்ற போது புறவழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
Comments
English summary
7 killed, car and lorry crash near thiruvannamalai