For Daily Alerts
Just In
நெல்லை அருகே கிடாவெட்டில் விபரீதம்.. கறி சாப்பிட்ட 70 பேர் மயங்கி விழுந்தனர்
நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே கறிச்சோறு சாப்பிட்ட 70 பேர் மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
புளியங்குடி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் மாடசாமி கோவில் திருவிழா நடந்தது. திருவிழாவில் கிடா வெட்டி கறிச் சோறு போட்டனர். இந்த விருந்தை சாப்பிட்ட பின்னர் 70 பேருக்கு மயக்கம், வாந்தி ஆகியவை ஏற்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக 40 பேரை அரசு மருத்துவமனைக்கும், 30 பேரை தனியார் மருத்துவமனைகளுக்கும் கொண்டு சென்று சேர்த்தனர்.
தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகள், பிற அதிகாரிகள் விரைந்து வந்தனர். இந்த திடீர் சம்பவத்தால் கோவில் விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
70 persons fell ill after eating mutton feast near Nellai, Puliyankudi.
Story first published: Wednesday, July 1, 2015, 15:17 [IST]