For Quick Alerts
For Daily Alerts
Just In
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 77 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்!
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 77 மீனவர்கள் காரைக்கால் வந்தடைந்தனர்.
காரைக்கால்: இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 77 தமிழக மீனவர்கள் வியாழக்கிழமை இரவு காரைக்கால் வந்தனர்.
இலங்கை கடற்படையால் 2 மாதங்களில் இதுவரை 93 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 77 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இலங்கை கடற்படை கப்பல் மூலம் 77 பேர் வியாழக்கிழமை காலை புறப்பட்டனர். நடுக்கடலில் இந்திய கடற்படையிடம் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 77 மீனவர்கள் காரைக்கால் வந்தனர்! https://t.co/kZ3hXO3WDV #fisherman #Arrest #SriLanka pic.twitter.com/qYeNxVAtCg
— Oneindia Tamil (@thatsTamil) August 3, 2017
பின்னர் ரோந்து கப்பல் மூலம் அனைவரும் காரைக்கால் வந்து சேர்ந்தனர். அவர்களை அமைச்சர் ஜெயக்குமார், ஓஎஸ் மணியம் ஆகியோர் வரவேற்றனர்.
Comments
English summary
The Indian Coast Guard ship sailed into Karaikal Port with the 77 TamilNadu fishermen released by Sri Lanka.