For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகத்தில் 8 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது...

secratariate

சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் கே.மகரபூஷணம், பேரூராட்சிகள் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் முன்னாள் மேலாண்மை இயக்குனர் எம்.சந்திரசேகரன், பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில அரசுப் பணிக்கு திரும்பியுள்ள ராஜேந்திரகுமார், தொழில்துறை ஆணையர் மற்றும் தொழிற்சாலைகள், வர்த்தக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பேரூராட்சிகள் இயக்குனர் ராஜேந்திர ரத்னூ, பூம்புகார் கப்பல் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கிரன் குராலா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் மேல்படிப்பை முடித்துத் திரும்பியுள்ள காகர்லா உஷா, தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை சந்தை மற்றும் வர்த்தக இயக்குனர் சி.மனோகரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வணிகத்துறை முன்னாள் இயக்குனர் மங்கத் ராம் சர்மா மாநில அரசுப் பணிக்கு திரும்பியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு தமிழக தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

English summary
8 IAS Officers transferred in Tamilnadu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X