For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 மணல் குவாரிகள் திடீர் மூடல்… மணல் தட்டுப்பாடு அதிகரித்து விலை உயரும் அபாயம்

தமிழகத்தில் உள்ள 9 மணல் குவாரிகள் திடீரென்று மூடப்பட்டுள்ளன. இதனால் மணல் விலை அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் உள்ள 9 மணல் குவாரிகள் திடீரென மூடப்பட்டுள்ளன. இதன் மூலம் செயற்கையான விலை ஏற்றம் ஏற்படும் என்று அஞ்சப்படுகிறது.

நேற்று, திடீரென்று 9 குவாரிகள் மூடப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 4 மணல் குவாரிகளும், கரூர் மாவட்டத்தில் 2 குவாரிகளும் அரியலூரில் 2 குவாரிகளும், விழுப்புரம் மாவட்டத்தில் 1 குவாரியும் திடீரென மூடப்பட்டன. மணல் ஏற்றப் போன லாரிகளும் வெளியேற்றப்பட்டன.

9 Sand quarries closed in TN

இதனால் கட்டுமானத் தொழில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். 60 சதவீதம் கட்டுமானத் தொழில் நின்றுவிட்டது என்றும் இதனால் மணல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

இதனால் சந்தையில் ஒரு லோடு மணல் 40 ஆயிரம் வரை தற்போது விற்கப்படுகிறது என்பதால் மணல் குவாரிகளை மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று மணல் லாரி உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

English summary
Nine sand quarries were closed in 4 districts in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X