For Daily Alerts
Just In
சென்னை முகப்பேரில் விஷவாயுத் தாக்கி தொழிலாளர் பலியான பரிதாபம்
சென்னை முகப்பேரில் விஷவாயுத் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: முகப்பேரில் விஷவாயுத் தாக்கி ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மயக்கமடைந்த ராமச்சந்திரன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை முகப்பேரு கிழக்கில் கழிவு நீர் கால்வாயை சுத்தப்படுத்தும் பணியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தாஸ் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவு நீர் கால்வாயில் இருந்து விஷவாயு தாக்கியது.
இதில் தாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயக்கமடைந்த ராமச்சந்திரன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தாஸின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
A sweeper named doss died near in Chennai mogappair while cleaning the drainage.another person Ramachandran admitted in hospital.
Story first published: Wednesday, April 26, 2017, 17:49 [IST]