நாடு நலம் பெற வேண்டிநரிக்குறவ சமூக மக்கள் ஆடு, மாடுகளை வெட்டிரத்தம் குடித்து வினோத வழிபாடு
விழுப்புரம்: விழுப்புரத்தில் மழை வேண்டியும், நாடு நலம் பெற வேண்டியும் ,நரிக்குறவ சமூக மக்கள் அவர்கள் முகாமிட்டுள்ள பகுதியில் தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு ஆடு, மாடுகளை வெட்டி பலிகொடுத்து ரத்தம் குடித்து வினோத வழிபாடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தங்கள் இஷ்ட தெய்வ வழிபாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க கூடாது என்றும்,அனுமதி அளிக்க வேண்டும் என்றும் அந்த இன மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் நரிக்குறவர் சமூகத்தினர் பல ஊர்களில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையாக நாடோடிகளைப்போல் அவ்வப்போது இடம் பெயர்ந்து கொண்டிருப்பார்கள்.
இவர்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடுமிடங்களில் ஊசி, பாசி, போன்ற சிறு பொருட்களை விற்கும் தொழிலைச் செய்து வருகின்றனர். குறவர்கள் சித்தமருத்துவம், இயற்கை மருத்துவம் அறிந்தவர்கள். நாடி பார்த்து நோய்க்குறி சொல்லுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.