For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவையில் பாகிஸ்தான் தேசிய கொடியை எரிக்க முயன்றவர்கள் கைது

By Mathi
Google Oneindia Tamil News

ABVP Volunteers Held for Attempting to Burn Pak Flag
கோயம்புத்தூர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதைக் கண்டித்து கோவையில் பாகிஸ்தான் தேசிய கொடியை எரிக்க முயன்ற அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர எல்லையில் கடந்த 2 மாதங்களாக பாகிஸ்தான் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் எல்லையோர கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர நேரிட்டுள்ளது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கோயம்புத்தூரில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கண்டனப் போராட்டத்தின் போது பாகிஸ்தான் தேசிய கொடியை எரிக்க சிலர் முயன்றனர். அப்போது போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்த போராட்டத்தின் போது பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உருவப்படத்தையும் சிலர் எரிக்க முயன்றனர். அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

English summary
Volunteers of Akhil Bharatiya Vidyarthi Parishad were arrested today for attempting to burn Pakistan national flag to protest against the violation of ceasefire along the border.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X