சசிகலாவிடம் நிறைய பணம் இருப்பதால் அவர் எதுவும் செய்வார் - நடிகர் ஆனந்த் ராஜ் விளாசல்: வீடியோ
சசிகலாவிடம் பெரும் பணம் இருப்பதால் அவர் எதை வேண்டுமானாலும் செய்வார் என நடிகர் ஆனந்தராஜ் விளாசியுள்ளார்.
சென்னை: சசிகலாவிடம் அளவுக்கதிகமாக பணம் இருப்பதால் அவர் பரப்பன அக்ரஹாரா சிறை மட்டுமல்ல அப்பல்லோ மருத்துவமனையின் ரகசியங்களையும் அடைத்துவிட்டார் என அதிமுகவின் முன்னாள் நட்சத்திர பேச்சாளர் நடிகர் ஆனந்த் ராஜ் கூறியுள்ளார்.
அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக இருந்தவர் நடிகர் ஆனந்த் ராஜ். இவர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா பொதுச்செயலாளர் என்கிற செய்தி வெளிவர ஆரம்பித்ததும் அக்கட்சியிலிருந்து விலகினார். சசிகலாவையும் தினகரனையும் எதிர்த்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் அவ்வப்போது கூறிக்கொண்டு இருப்பார்.
Recommended Video
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆனந்த் ராஜ், நடிகர் கமல் கருத்துகளுக்கு அமைச்சர்கள் மரியாதையற்ற வகையில் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம் என்று கூறினார்.
மேலும், சசிகலாவிடம் அளவிடமுடியாத அளவுக்கு பணம் இருப்பதால் அவர் அக்ரஹாரா சிறையை மட்டும் விலைக்கு வாங்கவில்லை. அப்பல்லோ மருத்துவமனையின் ரகசியங்களை அடைத்தார் என்றார்.