For Daily Alerts
Just In
நடிகர் கரணின் 90 வயது தந்தை பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்தார்
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டில் நடிகர் கரணின் தந்தை இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் திரைப்பட நடிகர் கரண். இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது தந்தை கேசவன் கோயம்பேடு சேமாத்தம்மன் கோயில் தெருவில் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், இவரது வீடு திங்கள்கிழமை வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து, அக்கம்பக்கத்தினர் வீட்டை திறந்துள்ளனர். அப்போது உயிரிழந்த நிலையில் கேசவன் தரையில் இருந்ததை பார்த்து, அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இதில் வயதின் காரணமாக கேசவன் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து, அவரது உடல் நடிகர் கரணிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்று போலீஸார் தெரிவித்தனர்.
Comments
English summary
Actor karan’s father died inside the locked house in Chennai, Koyampedu. Police hand over the body to Karan.
Story first published: Tuesday, December 16, 2014, 16:01 [IST]