பீட்டாவ ஒழிக்க வந்திருக்கோம்... லொள்ளு சபா மனோகர் விளாசல்
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்துக்கு நடிகர் லொள்ளு சபா மனோகர் ஆதரவு தெரிவித்துள்ளார். பீட்டாவை ஒழிக்க ஒன்று திரண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை: மெரினாவில் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் லொள்ளு சபா மனோகர், பீட்டாவை ஒழிக்க ஒன்று கூடியுள்ளதாக கூறினார். அப்போது பீட்டா மற்றும் அரசியல்வாதிகளையும் அவர் சரமாரியாக விளாசினார்.
சென்னை மெரினாவில் இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞர்களின் போராட்டத்துக்கு நடிகர் லொள்ளு சபா மனோகர் ஆதரவு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பீட்டா அமைப்பு மற்றும் அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார்.
''பீட்டா அமைப்பு எங்கிருந்து வந்தது? பீட்டாவை ஒழிக்கதான் திரண்டுள்ளோம், ஏறுதழுவுதல் 2500 வருடங்களுக்கு முன்பே தம் மூதாதையர் கொண்டுவந்தது. தாங்கள் சிந்து கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல. சூரியன், தண்ணீர் மாடுகளை தெய்வமாக வணங்கியவர்கள். ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் வாதிககள் அரசியல் செய்து வாழ்ந்தார்கள். நடிகர்கள் முதலமைச்சராக வாழ்ந்தார்கள், நடிகர்களுக்கு முதலமைச்சராக ஆகும் என்னமில்லை. நாடே பற்றி எரியும் போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்'' இவ்வாறு நடிகர் மனோகர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.