பேஸ்புக்கில் மதுக் கோப்பையுடன் சரத்குமார் புகைப்படம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..
சென்னை : பல ஆயிரம் பேர் பேஸ்புக்கில் பின்பற்றி வரும் சரத்குமார் மதுகோப்பையுடன் தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் பக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் நடிகர் சரத்குமார். நாட்டு நடப்புகள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் உடனடியாக பதிவிடுவார்.
இந்நிலையில் அண்மையில் அவர் பதிவேற்றியுள்ள புகைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. ஒரு மதுபானக் கூடத்தில் அவர் மது கோப்பையுடன் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினை அவர் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படம்தான் தற்போது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.,
சரத்குமார் ஒரு பொறுப்பு மிக்க அரசியல்வாதி மற்றும் சட்டபேரவை உறுப்பினரும் கூட. இவ்வாறிருக்க மது கோப்பையுடன் இந்த புகைப்படத்தை அவர் பதிவேற்றலாமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.