வெயிலுக்கு இதமாக மோர் கொடுக்கும் நடிகர் விவேக்
வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் இலவச மோர் கொடுத்து சேவை செய்கிறார்.
சென்னை: சித்திரை மாத கத்திரி வெயில் கண்ணை கட்டுகிறது... அனலை கக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக நடிகர் விவேக் தனது வீட்டருகே உள்ள பொதுமக்களுக்கு நீர் மோர் கொடுத்து தாகம் தீர்க்கிறார்.
தமிழகம் முழுவதும் வெயில் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் குளுமையான பிரதேசங்களை நாடிச் செல்கின்றனர். பலரோ இயற்கை குளிர்பானங்களை குடித்து தாக சாந்தியடைகின்றனர்.
ஏதோ என்னால முடிஞ்சது. pic.twitter.com/5zMIKkdoEl
— Vivekh actor (@Actor_Vivek) April 29, 2017
அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு தண்ணீர் பந்தர், நீர்மோர் பந்தல் திறப்பார்கள். கடந்த ஆண்டு பழங்கள், தர்பூசணி, வெள்ளரிக்காய்களை கொடுத்து வாக்காளர்களைக் கவர்ந்தனர். இந்த ஆண்டு ஆளும்கட்சியினர் இரண்டு பட்டு கிடப்பதால் தண்ணீர், மோர்பந்தல் யாரும் திறக்கவில்லை.
தவிக்கும் பொதுமக்களுக்காக நீர்மோர் பந்தல் திறந்துள்ளார் நடிகர் விவேக். இதுபோல அனைவரும் சேவை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.