மாநகராட்சிகளில் அதிமுக வென்றால் இவர்களுக்குதான் மேயர் வாய்ப்பு!
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் களை கட்டியுள்ளது. அதிமுக வேட்பாளர்கள் இன்று ஒரே நேரத்தில் வேட்பு மனுத்தாக்கல் செய்து அசத்தினர்.
இதனிடையே மாநகராட்சிகளில் அதிமுக வென்றால் யார் யாருக்கு மேயராகும் வாய்ப்பு கிடைக்கும் என பட்டிமன்றத்தையும் அதிமுக தொண்டர்கள் நடத்தி வருகின்றனர்.
சென்னையைப் பொறுத்தவரையில் ஜேசிடிபிரபாகரன் மற்றும் நா. பாலகங்கா ஆகிய இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்குமாம்.. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் எஞ்சிய 3 முன்னாள் எம்.எல்.ஏ.க்களில் ஒருவருக்கு துணைமேயர் பதவிக்கு வாய்ப்புள்ளதாம்.
சேலம் சவுண்டப்பன்
வேலூரில் 60-வது வார்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள ஜெ.அமலநிருபாவுக்கும் சேலத்தில் தற்போதைய மேயர் சவுண்டப்பனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கலாம்.
சேலம் உமாராஜூ
தேமுதிகவில் இருந்து அதிமுகவுக்கு வந்த சேலம் உமாராஜுக்கு 40-வது வார்டில் போட்டியிடுகிறார். அவரும் மேயர் கனவில் இருக்கிறாராம்.
திருப்பூரில் மாஜி அமைச்சர்
ஈரோட்டில் தற்போதைய துணை மேயர் கே.சி.பழனிச்சாமி, மண்டல தலைவர் மா.கேசவ மூர்த்தி ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. திருப்பூரில் முன்னாள் அமைச்சரும் மாவட்டச் செயலாளருமான எம்.எஸ்.எம். ஆனந்தனுக்கு நிச்சயம் மேயராகும் வாய்ப்பு கிடைக்குமாம்.
திருச்சியில் மல்லுக்கட்டு
கோவையில் சீனியரான தாமரைச் செல்வியைவிட எஸ்.ஷர்மிளா, திருச்சியில் சிட்டிங் மேயர் ஜெயா அல்லது தமாகாவில் இருந்து வந்த முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் ஆகியோரது பெயர்கள் மேயர் பதவிக்கு அடிபடுகின்றன.
மதுரையில்...
தஞ்சையில் தற்போதைய மேயர் சாவித்திரி கோபால், ஏ.ஜி.தங்கப்பன், அறிவுடை நம்பி ஆகியோர் ரேசில் உள்ளனர். மதுரையில் கே.சண்முகவல்லி, கண்ணகி பாஸ்கரன், திண்டுக்கல்லில் தற்போதைய மேயர் மருதராஜின் மகள் எம்.பொன்முத்து ஆகியோர் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
விஜிலா சகோதரி
நெல்லையில் அதிமுக மகளிர் அணி செயலாளரும், எம்பியுமான விஜிலா சத்தியானந்தின் சகோதரி வெண்ணிலா ஜீவபாரதிக்குதான் மேயராகும் வாய்ப்பிருக்கிறதாம்.