'அம்மா' முதல்வராக அன்னதானம்.. 'கோ'தானம்.. அண்ணா தி.மு.கவினரின் அதிரடி பூஜைகள்!!
சென்னை: அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டும், அவர் நீடூழி வாழ வேண்டியும், மீண்டும் தமிழக முதல்வராகவும் அதிமுக இலக்கிய அணி சார்பில் இலக்கிய அணி செயலாளரும் சமூக நலத்துறை அமைச்சருமான பா.வளர்மதி தலைமையில் அசோக்நகர் பிடாரி ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் சிறப்பு விளக்கு பூஜையும் ,அன்னதானமும் நடைபெற்றது.
இதில் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம்,மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி,ஜி.செந்தமிழன் எம்.எம்.ஏ,பகுதி செயலாளர்கள் என்.எஸ்.மோகன்,கே.மலைராஜன்,நுங்கை மாறன்,கவுன்சிலர்கள் டி.சிவராஜ்,ஸ்டார் குணசேகரன்,அலமேலு அமாவசை,வத்சலா,மற்றும் ஷேக் அலி,ஈகை செல்வம்,எம்.ஜார்ஜ்,எ.வில்லியம்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு தென்சென்னை வடக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ஸ்டிக்கர் ரவி ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் நடைபெற்ற கோ.பூஜையில் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கோவிலுக்கு பசுவையும் , கன்றையும் தானமாக வழங்கினார்.
இதில் அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம்,பகுதி செயலாளர் வி.கே.பாபு,மாணவரணி செயலாளர் செந்தில்வேல்,வழக்கறிஞர் சதாசிவம்,சூளைமேடு ராஜேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.