For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. முதல்வராக வேண்டி பிள்ளையார் கோவில் கட்டிய அதிமுக தொண்டர்!

Google Oneindia Tamil News

நாகை : சீர்காழி அருகே உள்ள நெய்தவாசல் பகுதியை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி என்ற அ.தி.மு.க. பிரமுகர் ஜெயலலிதா முதல்வராக வேண்டி விநாயகர் கோவில் கட்டியுள்ளார்.

சுந்தரமூர்த்தி காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராகவும் இருந்து வருகிறார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு தண்டனை அளிக்கப்பட்டதால் சுந்தரமூர்த்தி மனவேதனை அடைந்திருந்தார்.

ADMK Worker build temple for Jaya

வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி மீண்டும் முதல்வராக வேண்டும் என அவர் பிரார்த்தனை செய்து வந்தார். ஜெயலலிதா விடுதலையானால் தனிக்கோவில் கட்டுவதாகவும் அவர் வேண்டினார்.

இதற்காக தனது வீட்டின் அருகில் சொந்த இடத்தில் சங்கர விநாயகர், மன்மத சுவாமி கோவிலை சிறியதாக கட்ட முடிவு செய்தார். இதற்கான திருப்பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா மீண்டும் நாளை முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இதனை தொடர்ந்து சுந்தரமூர்த்தி தான் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தினார்.

இதில் உள்ளளூர் அ.தி.மு.க. பிரமுகர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

English summary
An ADMK worker built a temple for Jayalalitha and held Kumbabishekam today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X