For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிறைக் காவல் 30ம் தேதி வரை நீட்டிப்பு

Google Oneindia Tamil News

நெல்லை: வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் சிறைக் காவலை நீட்டித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Agri krishnamoorthy’s judicial custody extended

ஏப்ரல் 17ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்ததால் அவர்கள் இன்று பாளையங்கோட்டை சிறையில் காணொளி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது இருவரையும் 30ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நெல்லை நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

ஏற்கனவே, நேற்று விசாரணைக்கு வந்த செந்திலின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
Agri krishnamoorthy and senthil’s court judicial custody extended by the nellai court
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X