139 தொகுதிகளில் வென்று தமிழகத்தில் அதிமுக ஆட்சியமைக்கும்: சி-வோட்டர் எக்ஸிட் போல்
சென்னை: அதிமுக கூட்டணி 139 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று சி-வோட்டர் எக்ஸிட் போல் கருத்து கணிப்பு கூறுகிறது.
ஆக்ஸிஸ் இந்தியா மற்றும், நியூஸ் நேஷன் ஆகிய தேர்தலுக்கு பிந்தைய, கருத்து கணிப்புகள், திமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று கூறிய நிலையில், சி-வோட்டர் முற்றிலும் மாறுபட்ட நிலையை காட்டுகிறது.
சி-வோட்டர் கருத்துக்கணிப்புப்படி, தமிழகத்தில் அதிமுக கூட்டணி 139 தொகுதிகளில் வெற்றி பெறும். திமுக, காங்கிரஸ் கூட்டணி, 78 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளது.
பிறர் 17 தொகுதிகளில் வெல்ல வாய்ப்புள்ளதாகவும், பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் இக்கருத்து கணிப்பு கூறுகிறது.
வாக்கு சதவீதம் அடிப்படையில் அதிமுகவுக்கு 39 சதவீதம் வாக்குகளும், திமுக கூட்டணிக்கு 32 சதவீத வாக்குகளும், பாஜக கூட்டணிக்கு 3 சதவீத வாக்குகளும், பிறருக்கு 26 சதவீத வாக்குகளும் கிடைக்கும் என்ரு கூறுகிறது. இந்த கருத்து கணிப்பு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக 150 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.