சென்னை விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமான டயர் வெடிப்பு – பத்திரமாக தரை இறக்கிய விமானி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்றுகாலை தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை ஹைதராபாத்திலிருந்து சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தின் டயர்கள் தரையிரங்குவதற்கு சில நிமிடங்கள் இருந்த நிலையில் திடீரென்று வெடித்தது.
அப்போது விமானியின் சாமர்த்தியத்தால் ரன்வேயில் உராய்ந்தபடி விமானம் பத்திரமாக தரையிறக்கி நிறுத்தப்பட்டது.
இந்த விமானத்தில் 160 பயணிகள் மற்றும் ஊழியர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டயர் திடீரென்று வெடித்தற்கான காரணத்தினை விமான நிலைய வல்லுனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே, 34 முறை இடிபாடுகள், விமான நிலைய ரன்வேயில் தீவிபத்து என்று போதாத காலத்தில் சென்னை விமான நிலையம் தத்தளித்து வரும் நிலையில் அடிக்கடி இதுபோன்ற நிகழ்வுகள் விமான பயணிகள் மத்தியில் பீதியைக் கிளப்பியுள்ளது.