For Daily Alerts
Just In
சென்னை ஏர்போர்ட்டில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து- 82 பேர் உயிர் தப்பினர்
சென்னை: சென்னை விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 82 பயணிகளும் உயிர் தப்பினர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து 82 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்று அந்தமான் புறப்பட்டது. அப்போது திடீரென விமானத்தின் டயர் வெடித்து விபத்து ஏற்பட்டது.
இதனால், உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அதில் இருந்த 82 பயணிகளும் பத்திரமாக தரையிறக்கப் பட்டனர். பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது.
இந்த விபத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Comments
English summary
In Chennai airport, 82 passengers luckily escaped from the Air India flight tyre blast accident.