'அம்மா' மீண்டும் முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்வார்: சின்னத்திரை நடிகர் சங்கம்
சென்னை: ஜெயலலிதா அனைத்து தடைகளையும் வென்றெடுத்து மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்வது திண்ணம் என்று சின்னத்திரை நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நளினி, பொதுச் செயலாளர் பூ விலங்கு மோகன், பொருளாளர் தினகரன் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக மக்களின் நலன் காக்கும் தங்கத் தலைவியாம் மக்களின் முதல்வர் அம்மா சோதனைகளை கடந்து தமிழகம் திரும்பியிருப்பது சின்னத்திரை கலைஞர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியே... அவர்கள் அனைத்து தடைகளையும் வென்றெடுத்து மீண்டும் தமிழக முதல்வராக ஆட்சிக் கட்டிலில் அமர்வது திண்ணம்.
பெற்ற தாய்க்கு மேலாக தன்னை நாடி வரும் கோடான கோடி தமிழ் இதயங்களின் தேவைகளை கொடுத்து, தமிழ் மக்களின் துயரங்களை துடைக்கும் புரட்சித்தலைவிக்கு கசந்த காலம் வசந்த காலமாக மாற சின்னத்திரை நடிகர் சங்கம் பிரார்த்தனை செய்கிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.