For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் நடுரோட்டில் கொடூரக் கொலை... அதிர்ச்சியில் பொதுமக்கள்! - வீடியோ

சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த டவர் சரவணன் என்பவர் மதுரை அலங்காநல்லூரில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: மதுரை அலங்காநத்தம் பகுதியில், சிறையில் இருந்து வெளியில் வந்த ஒருவர் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையில் வசித்து வருபவர் டவர் சரவணன். இவர் 2014ஆம் ஆண்டு, செய்த கொலைக்காக சிறை சென்றுள்ளார். இந்நிலையில் அவர் ஜாமீனில் இன்று சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

மதுரை

அப்போது அலங்காநத்தம் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது அடையாளம் தெரியாத நபர்களால் நடுரோட்டில் அரிவளால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் பலரது முன்னிலையில் பட்டப்பகலில் நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து தமிழகத்தில் நிலையான ஆட்சியும் அரசு இயந்திரங்கள் சரியாக இயங்காமலும் இருக்கின்றன.

இதனால் பலகொலைச் சம்பவங்கள் மிக சர்வ சாதரணமாக பட்டப்பகலில் பலரது கண் முன்னேயே நடக்கிறது. ஆனால் இதையெல்லாம் ஒடுக்க வேண்டிய காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

English summary
In Madurai Alanganallur an accused came out from jail and he murdered by unknown persons.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X