ஜெ. மரணம்: அப்பல்லோ அடுத்து அள்ளிவிடப் போகும் கட்டுக் கதை இதுதான்!
ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு மீண்டும் விளக்கம் என்ற பெயரில் கட்டுக் கதைகளை அளந்துவிட தயாராகி வருகிறதாம் அப்பல்லோ மருத்துவமனை
சென்னை: ஜெயலலிதாவின் மரணத்தை முன்வைத்து அப்பல்லோ மருத்துவமனையை சுற்றி ஆயிரமாயிரம் கேள்விகள் எழுந்துள்ளது. இந்த கேள்விகளுக்கு பதில் தருவதாக நினைத்துக் கொண்டு அடுத்த கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட அப்பல்லோ நிர்வாகம் தயாராகி வருகிறதாம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் செப்டம்பர் 22-ந் தேதி அனுமதிக்கப்பட்ட நாள் முதலே அப்பல்லோ மருத்துவமனை மர்ம மாளிகையாகிவிட்டது. அப்பல்லோவில் என்னதான் நடக்கிறது என்பதை நாடும் நாட்டும் மக்களும் அறிய முடியாத நிலையே இருந்து வந்தது.
அப்பல்லோவில் ஜெயலலிதா மறைந்த நிலையில் மர்மங்கள் துளியும் விலகிவிடவில்லை. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபமெடுத்துள்ளது.
அனைத்தும் முரண்
இதனிடையே அவ்வப்போது அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கைகள், மருத்துவர்களின் பேட்டிகள், கடைசியாக வெளியிட்ட அறிக்கை என அனைத்துமே முரண்பாடுகளின் மொத்த உருவமாக இருக்கிறது. இது அப்பல்லோ நிர்வாகத்துக்கு சிக்கலைக் கொடுத்துள்ளது.
ஜெ. உணவு விவகாரம்
இதையடுத்து அப்பல்லோ நிர்வாகம் சந்தேகங்களுக்கான பதில்களைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. முதலில் ஜெயலலிதாவுக்கு கொடுக்கப்பட்ட உணவு விவகாரத்தை சமாளிக்க முடிவு செய்துள்ளதாம்.
யார் சோதித்தது?
ஜெயலலிதா, கமாண்டோ பாதுகாப்பு படையில் இருப்பவர்; அவருக்கான வெளி உணவுகள் பரிசோதிக்கப்பட்டு பதிவேட்டில் பதிவு செய்யப்பட வேண்டும்; ஏன் இப்படி செய்யவில்லை என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது. இதற்குதான் முதல் பதிலை ரெடி செய்கிறதாம் அப்பல்லோ.
இதுதான் அந்த பதில்
அந்த பதிலில், ஜெயலலிதாவின் தனிப்பட்ட சமையலரையே அப்பல்லோ மருத்துவமனை அழைத்து வந்தது. அவர் இங்கேயே தங்கி இருந்து ஜெயலலிதாவுக்கான உணவுகளை தயாரித்து கொடுத்தார்; அதனால் கமாண்டோ படையினர் அதில் சந்தேகப்படவில்லை. ஆகையால் பதிவேடுகள் எதுவும் தேவையில்லை என ஒரு விளக்கம் தரப்போகிறதாம் என்கின்றன அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள்.