For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

8 ஆம் வகுப்பு மாணவிக்கு திருமண ஆசை காட்டி பலாத்காரம் – 19 வயது ஆட்டோ டிரைவர் கைது

Google Oneindia Tamil News

திருப்பூர்: திருப்பூரில் திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற எட்டாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த 19 வயதான ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் அருகிலுள்ள குப்பாண்டாம்பாளையத்தை சேர்ந்தவர், அருண் பாண்டியன் ஒரு சரக்கு ஆட்டோ டிரைவர். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த 8 ஆம் வகுப்பு பயிலும் 13 வயது ஒரு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த 14 ஆம் தேதி அம்மாணவியை, அருண் பாண்டியன் திருமண ஆசை காட்டி கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

Auto driver arrests in rape case…

நேற்று முன்தினம் இரவு பல்லடம் ரோடு, வித்யாலயம் அருகே, அருண்பாண்டியன் மற்றும் மாணவி இருவரையும் போலீசார் கண்டுபிடித்தனர். மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில், அருண்பாண்டியன் மாணவிக்கு திருமண ஆசை காட்டி கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியது தெரிவந்தது.

இதைத்தொடர்ந்து அருண்பாண்டியனை கைது செய்த போலீசார் திருப்பூர் குற்றவியல் இரண்டாம் எண் நீதி மன்ற மாஜிஸ்திரேட் வேலுசாமி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். பின் பொள்ளாச்சியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

English summary
Young auto driver was arrested in rape case in Tirupur. Police filed case and arrested him in harassment case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X