For Daily Alerts
Just In
கோர்ட்டுக்குள்ளேயே கொலையா?- நீதிமன்ற வளாகத்தினுள் கிடந்த சடலத்தால் அதிர்ச்சி!
சிவகங்கை: சிவகங்கை நீதிமன்றத்தில் அடையாளம் தெரியாத சடலத்தினால் பொதுமக்கள், வழக்கறிஞர்கள், போலீசாரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை நுகர்வோர் கோர்ட் வளாகத்தில் நேற்று அடையாளம் தெரியாத வாலிபா் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. முதற்கட்ட தகவல்களின்படி அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.
மேலும், கொலை செய்து விட்டு எதற்காக கோர்ட் வளாகத்தினுள் போட்டுவிட்டு சென்றனர்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இருக்குமா என்பதெல்லாம் குறித்து போலீசார் விசாரணை நடைபெற்று வருகின்றது.
நீதிமன்ற வளாகத்திலிருந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary
An unknown youngster's body confiscated from Sivagangai court, people feared;police on inquiry.
Story first published: Monday, September 7, 2015, 10:45 [IST]