For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் - வீடியோ

மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வெடுகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அதையடுத்து போலீஸ் அங்கு சோதனை நடத்தியதில் வெடிகுண்டுகள் இல்லை என உறுதி செய்யப்பட்டது.

By Suganthi
Google Oneindia Tamil News

மதுரை: மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இதனால் வங்கிகளில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியியின் தலைமை அலுவலகத்துக்கு, மதுரையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஒன்றில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடப்பட்டது.

 Bomb threat given to Sbi Madurai and police searched, found nothing

இதனால் பதறிப்போன அதிகாரிகள், காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து போலீசார் மதுரையில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளிலும் வெடிகுண்டு நிபுணர்களைக் கொண்டு சோதனை நடத்தினர். மோப்பநாய்களைக் கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.

ஆனால், மதுரையில் உள்ள எந்த எஸ்.பி.ஐ வங்கிக் கிளைகளிலும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மிரட்டலை யார் விடுத்தது என்பதும் தெரியவில்லை.இதனால் மதுரையில் உள்ள அனைத்து எஸ்.பி.ஐ வங்கிகளில் பதற்றமும் பரபரப்பும் காணப்பட்டது.

English summary
Some unknown person called head quarters of SBI in Chennai and told that In Madurai SBI banks, bombs placed. After this call, they gave complaint to police and they searched every where and nothing found.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X