ஓடியாங்க ஓடியாங்க.. வந்துருச்சு பாம்பே சர்க்கஸ்.. சென்னைக்கு!
சென்னை: இந்தியாவின் பிரபலமான பாம்பே சர்க்கஸ் நிறுவனம் சென்னைக்கு வந்துள்ளது. கடந்த 19ம் தேதி முதல் இந்த சர்க்கஸ் நடந்து வருகிறது.
சர்க்கஸ் நிறுவனத்தின் கலைஞர்கள் பார்வையாளர்களை கவர்ந்திழுத்து வருகின்றனர்.
சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே உள்ள எஸ்ஐஐஏ மைதானத்தில் இந்த சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
1920 முதல்
1920ம் ஆண்டு முதல் எங்களது சர்க்கஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.
ஜனாதிபதி முதல் சாமானியர்கள் வரை
எங்களது சர்க்கஸை ஜனாதிபதி முதல் சாமானியர்கள் வரை பல தரப்பினரும் ரசித்துப் பார்த்து வருகின்றனர். பல பிரதமர்களும் பார்த்து ரசித்துள்ளனர்.
சாகச நிகழ்ச்சிகள்
இந்த நிலையில் எங்களது நிறுவனத்தின் வீரர்கள், சென்னை சென்டிரல் ரயில் நிலையம் அருகே கடந்த 19ம் தேதி முதல் சர்க்கஸ் செய்து காட்டி வருகின்றனர்.
கென்யா - கரீபியாவிலிருந்து
இந்த நிகழ்ச்சியில் கென்யா, கரீபியன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் சாகச நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
டைமிங் என்னப்பா
தினசரி மதியம் 1 மணி, 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் நடைபெறும்.
ரூ. 100 முதல் 300 வரை
பார்வையாளர் கட்டணமாக ரூ. 100, 200, 300 என நிர்ணயித்துள்ளோம். முன்பதிவு செய்யும் வசதியும் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.