For Quick Alerts
For Daily Alerts
Just In
அடேங்கப்பா.. ஜல்லிக்கட்டுக்காக கருத்து சொல்லிவிட்டாரே பொன்னையன்
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் கூ
சென்னை : ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் வலியுறுத்தியுள்ளார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்றும் அவர் கூறினார்.
அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஜல்லிக்கட்டு காளைகளை தமிழர்கள் தெய்வங்களாகதான் பார்க்கின்றனர் என்றும் பொன்னையன் கூறினார். மேலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதிமுக ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளது என்றும் பொன்னையன் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, சசிகலா, சின்னம்மா போன்ற வார்த்தைகளை கூறவே வாய் திறந்து வந்த பொன்னையன் இப்போது பொதுப் பிரச்சினை ஒன்றுக்காக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
ADMK spokes person met media today. He was urging central government to come up emergency legislation on Jallikkattu issue. Pannaiyan says that ADMK always standing in line for jallikkattu.
Story first published: Tuesday, January 10, 2017, 18:21 [IST]