For Daily Alerts
Just In
ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்த சி.பி.ஐ.!
சென்னை: சென்னையில் ரூ1 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி ஒருவர் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மணலியில் இயங்கி வரும் மத்திய அரசுக்கு சொந்தமான எம்.எப்.எல் எனப்படும் மெட்ராஸ் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்ன் முதன்மை மேலாளர் ஞான சம்பந்தம்.
தனியார் நிறுவனத்தை சேர்ந்த கே.வி.ரெட்டி, குடிநீர் சுத்திகரிப்பு கருவி சப்ளை செய்யும் நிறுவனத்திற்கு தடையின்மை சான்றிதழ் பெறுவதற்காக ஞானசம்பந்தத்திடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த சி.பி.ஐ அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கையும், களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
Comments
English summary
Chennai central government official arrested in bribe case by CBI officials.
Story first published: Thursday, May 28, 2015, 10:41 [IST]