For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்து மயங்கிய 2 மாணவிகள்- மருத்துவமனையில் அனுமதி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பள்ளி வளாகத்தில் மாணவிகள் இருவர் விஷம் அருந்தி, மயங்கிய நிலையில் மீட்கப் பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த மாணவிகள் தாட்சாயிணி (15) மற்றும் மீனா (15). இவர்கள் இருவரும் சூளையில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் ஒன் படித்து வந்தனர்.

இந்நிலையில், இன்று மதியம் உணவு இடைவேளையின் போது வெளியே சென்ற இம்மாணவிகள் மயங்கிய நிலையில் பள்ளி வளாகத்தில் கிடந்துள்ளனர். மயங்கிய நிலையில் கிடந்த அம்மாணவிகள் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது.

உடனடியாக இருமாணவிகளும் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பாக வேப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

English summary
In Chennai two school girls had attempted suicide by drinking poison. They have been admitted in a hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X