வாவ்.. வாவ்.. சென்னையில் 5 நாளைக்கு டமால் டுமீல்னு மழை பெய்யும் - வெதர்மேன் கூல் நியூஸ்!
சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
சென்னை: வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை வலைப்பதிவர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவில், இந்த 5 நாட்களில் 2 முதல் 3 நாட்களாவது குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது, காற்றின் சுழற்சி சாதகமாக இருப்பதால் சென்னை உட்பட வட தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
சென்னையை வர்தா புயல் தாக்கி 6 மாதங்கள் ஆகிய நிலையில் சென்னையில் இந்த மூன்று நாட்களில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேபோல் கர்நாடகா மாநிலம் குடகு பகுதியிலும் மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் பாபநாசத்தில் 140 மிமீ மழை பெய்துள்ளது.
சென்னையில் காலை முதல் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் வானம் கறுத்து காற்றுடன் திடீர் மழை கொட்டியது குறிப்பிடத்தக்கது.