For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: +2 பள்ளி மாணவர்கள் மோதல்… மூவர் மீது வழக்குப் பதிவு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சைதாப்பேட்டையில் ப்ளஸ் 2மாணவனை தாக்கி தலையில் காயப்படுத்திய மூன்று மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தாக்குதலுக்கு ஆளான மாணவனின் பெயர் ஸ்ரீராம் என்பதாகும். ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருகிறான். சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வரும் ஸ்ரீராமை மாணவனை உடன் படிக்கும் மாணவர்கள் அடித்து காயப்படுத்தியுள்ளனர். இதில் ஸ்ரீராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கிண்டியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக ஸ்ரீராம் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இந்த சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் விசாரணை மேற்கொண்டார், இதில் மூன்று மாணவர்கள் ஸ்ரீராமை தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூன்று மாணவர்களை தேடி வருகின்றனர். மாயமான மாணவர்கள் அனைவரும் ஆதம்பாக்கம் பகுதியில் வசித்து வருவதாகவும் விரைவில் மூவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் தேடி வருகின்றனர்.

English summary
Police have launched a hunt for three school students for attacking a Class 12 student when he was returning home in Adambakkam on Tuesday. Police said the attack was due to enmity between the students in the school. The incident happened at 1pm on Tuesday, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X