அடடே... ஆளுநர் வந்தும் பரபரப்பாக எதுவும் இல்லையே... முதல்வரும் சந்திக்கலையே!
சென்னை: ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து ஆலோசனை நடத்தும் திட்டத்தை கைவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்று கூறப்படுகிறது.
தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று மதியம் 2.30 மணிக்கு சென்னை வந்தார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் வித்யாசாகர் ராவை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்று மதியம் தகவல்கள் வெளியாகின.
தற்போதைய அரசியல் சூழ்நிலை, எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் உள்ளிட்டவை குறித்து ஆளுநருடன், எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. அதிருப்தி எம்எல்ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து ஆளுநருக்கு முதல்வர் விளக்கம் அளிப்பார் என்று கூறப்பட்டது.
ஆனால், ஆளுநரை இன்று முதல்வர் சந்திக்கவில்லை. அடுத்ததாக ஆளுநர் என்ன முடிவு எடுப்பாரோ என்ற எதிர்பார்ப்பில் அரசியல் உள்ளது.