For Daily Alerts
Just In
மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் அவசர ஆலோசனை
சென்னை: மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, சண்முகம் ஆகியோருடன் முதல்வர் பழனிசாமி திடீர் ஆலோசனை நடத்தினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து ஹைகோர்ட்டை நாடியுள்ளனர். அது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், பேரறிவாளனின் பரோல் காலத்தை நீடிக்க அவரின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கைவிடுத்துள்ள நிலையில், அதுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
இதனிடையே அதிமுக டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
Comments
English summary
CM Edappadi Palanisamy discussing with senior ministers at his residence.
Story first published: Tuesday, September 19, 2017, 12:05 [IST]