கல்லூரி வேன் மீது லாரி மோதிய கோர விபத்து: கர்ப்பிணி பெண் உள்பட 7 மாணவிகள் பலி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகில் கல்லூரி வேன் மீது லாரி மோதியது. இதில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் தக்கலை அருகே புலியூர்குறிச்சியில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் மீது லாரி மோதியதில் 5 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலியான மாணவிகளில் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அம்மாணவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை பகுதியில் உள்ளது ஐய்யப்பா பெண்கள் கல்லூரி. இன்று வழக்கம் போல கல்லூரி முடிந்தது. அப்போது இந்த கல்லூரிக்கு சொந்தமான வேன் ஒன்று மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது.
அந்த வேன் தக்கலை நோக்கி சென்று கொண்டு இருந்த வேளையில் தக்கலையில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டு இருந்த லாரி புலியூர்குருச்சி அருகே எதிரே வந்த கல்லூரி வேனுடன் பயங்கரமாக மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த சிவரஞ்சனி, தீபா, மஞ்சு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானர்கள், சங்கீதா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். மேலும் 15 பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சிகிச்சை பெற்று வந்த மாணவிகளில் 3 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. இதில்
அப்போது அந்த வேன் மீது லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. பலியான மாணவிகளில் ஒருவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அம்மாணவி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் பலியாகியுள்ளது உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.