For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் - முத்தரசன்
ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: போயஸ் தோட்ட வீடு மட்டுமின்றி ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், முதல்வர் பழனிசாமி உட்பட அனைவரும் சிறந்த நடிகர்களே என்றும் நாடகத்தை இயக்குவது மத்திய அரசு என்றும் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியின் பலவீனத்தால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உரிமைகளும் பறிபோகின்றன என்று குற்றம் சாட்டிய அவர், போயஸ் தோட்ட வீடு மட்டுமின்றி ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளையும் அரசுடமையாக்க வேண்டும் என்று முத்தரசன் கூறியுள்ளார்.
Comments
English summary
CPI state secretary Mutharasan has asked the govts to nationalise late Jayalalitha's all assets
Story first published: Saturday, August 19, 2017, 12:52 [IST]