இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு: டி. ராஜா அஞ்சலி
மறைந்த ஜெயலலிதாவிற்கு ராஜ்ய சபா எம்பி டி. ராஜா அஞ்சலி ராஜாஜி ஹாலிலுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.
சென்னை: இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ராஜ்ய சபா எம்பி டி. ராஜா மறைந்த ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள மறைந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிட்டு ராஜ்ய சபா எம்பி டி. ராஜா, "இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும, ஈடு செய்ய முடியாத இழப்பு ஜெயலலிதாவின் மரணம். குணம் அடைந்துவிட்டார் இன்னும் சில நாட்களில் வீடு திரும்பி விடுவார் என்று அனைவரும் எதிர்ப்பார்த்திருந்த நிலையில் அவரது மரண செய்தி வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதாவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று டி. ராஜா கூறினார்.
சிபிஐ கட்சியை சேர்ந்த சி. மகேந்திரன் மற்றும் முன்னணி கட்சித் தலைவர்கள் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
75 நாட்களாக உடல் நலம் இல்லாமல் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவிற்கு நேற்று முன் தினம் மாரடைப்பு ஏற்பட்டு நேற்று இரவு 11.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவரது உடல் எம்.ஜி.ஆர் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.